Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

Siva
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (08:59 IST)
சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை வரை நடத்தப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் கூறினார்.

சென்னையில் மட்டும் 200 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும், மற்ற ஆறு மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட இருப்பதாகவும், தேவை அதிகமாக இருந்தால் முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவ முகாம்களில் சளி, காய்ச்சல், ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகள் செய்து கொள்ளலாம் என்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும் என்றும், மேலும் சில அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளவரை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்கள் அருகே அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை பயன்படுத்திக் கொண்டு பயன் பெற வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments