Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

50% சலுகை விலையில் நிலம்: தொழில் தொடங்குபவர்களுக்கு முதல்வர் அளித்த சலுகை

50% சலுகை விலையில் நிலம்: தொழில் தொடங்குபவர்களுக்கு முதல்வர் அளித்த சலுகை
, செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:26 IST)
புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 50% சலுகை விலையில் நிலம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதிலிருந்து தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவ்வப்போது புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறார் என்பதும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்கு அவர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் 22 மாவட்டங்களில் தொழில் துவங்குவதற்கு 50 சதவீத சலுகை விலையில் நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தென்மாவட்டங்கள் மற்றும் தர்மபுரி, பெரம்பலூர், நாகை உள்ளிட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்கள் என 22 மாவட்டங்களில் தொழில் துவங்குபவர்களுக்கு 50% சலுகை விலையில் நிலம், உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கும் வகையில் தொழில் கொள்கை அமைந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மதுபானம் ஆறாக ஓடுகிறது – நீதிமன்றம்