Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு தினத்தில் சென்னையில் பிறந்த 50 குழந்தைகள்.. பெற்றோர்களுக்கு சிறப்பு பரிசு..!

Mahendran
வியாழன், 2 ஜனவரி 2025 (10:08 IST)
நேற்றைய 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்த நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 50 குழந்தைகள் பிறந்ததாகவும், குழந்தைகளின் பெற்றோருக்கு மருத்துவமனைகளின் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு தாய் நல மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, ராயபுரம் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் மொத்தம் 50 குழந்தைகள் பிறந்ததாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தாண்டில் பிறந்த குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மருத்துவமனை சார்பில் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் 13 குழந்தைகள் பிறந்ததாகவும், சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 12 குழந்தைகளும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள், ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர். மருத்துவமனையில் 20 குழந்தைகள் பிறந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் அதேபோல், பரிசுகள் வழங்கப்பட்டது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments