Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமநாதபுரத்தில் 5 பன்னீர் செல்வங்கள் வேட்பு மனுக்கள் ஏற்பு.. ஒருவர் மனு மட்டும் தள்ளுபடி..!

Mahendran
வியாழன், 28 மார்ச் 2024 (13:20 IST)
ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட மொத்தம் ஆறு பன்னீர்செல்ம் என்ற பெயரில் போட்டியிட வேட்புமனு  தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் 5 ஓ பன்னீர்செல்வம் வேட்புமனு  ஏற்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதன் பிறகு தனி அமைப்பு தொடங்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் என்பதும் அவருக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் வேட்புமனு  தாக்கல் செய்த ஒரு சில நாட்களில் தொடர்ச்சியாக அவரது பெயரில் அடுத்தடுத்து ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த தொகுதியில் மட்டும் மொத்தம் ஆறு ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்ப மனு தாக்கல் செய்யப்பட்டதால் பெரும் குழப்பம் ஏற்படும் என்று கூறப்பட்டது \
 
இந்த நிலையில் பாஜக கூட்டணி வேட்பாளரான ஓ பன்னீர்செல்வம் மற்றும் நான்கு ஓ பன்னீர் செல்வங்கள் என மொத்தம் ஐந்து ஓ பன்னீர் செல்வங்கள் வேட்புமனு  ஏற்று கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments