Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வருகை

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (14:34 IST)
புனேயில் இருந்து இன்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்தனர். 
 
இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்ககியதில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் அலை தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. 
 
இதனால் தடுப்பூசி போடும் பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்துக்கு இந்த மாதம் அரசு மருத்துவமனைகள், முகாம்களில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசிடம் இருந்து 57,86,340 தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி புனேயில் இருந்து இன்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தன. அவை மாநில தொகுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்படுகிறது.
 
மத்திய தொகுப்பில் இருந்து படிப்படியாக தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது இதனால் தடுப்பூசி தட்டுப்பாடு குறைந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments