Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகாசி வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

சிவகாசி வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
, வியாழன், 25 பிப்ரவரி 2021 (19:46 IST)
சிவகாசி வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!
சிவகாசி அருகில் உள்ள காளையார்க்குறிச்சி என்ற பகுதியில் சற்று முன்னர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது என்பதும் இந்த வெடி விபத்தில் 3 பேர் பலியானதாக வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவலை பார்த்தோம். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது அதுமட்டுமின்றி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் ஒரு சிலர் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. சிவகாசியில் வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசு தலைவர் ஆட்சி!