Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்னும் ஓரிரு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை!

இன்னும் ஓரிரு மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை!
, வெள்ளி, 17 ஜூன் 2022 (10:39 IST)
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். 

 
தமிழ்நாட்டில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் ஜூன் 19 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையிடையே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல். 
 
அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கஷ்டம் இன்னும் தீரல.. தனுஷ்கோடி வந்த 7 இலங்கை தமிழர்கள்!