Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்களுக்கு ரயில் சேவை மாற்றம்..

Arun Prasath
திங்கள், 11 நவம்பர் 2019 (13:19 IST)
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பணி நடைபெறுவதால், ஐந்து நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் பணி நடைபெறுவதால் நவம்பர் 11 முதல் 15 வரை தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இரவு 8.01,9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படவுள்ளதாகவும், அந்த ரயில்கள் கடற்கரை-தாம்பரம் வரை இயங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இரவு 10.15 மற்றும் 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் பகுதியில் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த ரயில்கள் தாம்பரம்-கடற்கரை வரை இயக்கப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே அதிகாலை 3.55, 4.35, 5.15, 5.50 காலை 6.05, 6.43, மாலை 5.18, இரவு 8.01, 9.18 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படும் எனவும், செங்கல்பட்டு-சென்னை கடற்கரை வரை அதிகாலை 3.55, 4.35, 4.50, காலை 6.40, 6.55, இரவு 7.25, 10.15, 11.10 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments