Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3 லட்சம் கல்லூரி கட்டணம் செலுத்திய 5 மாணவர்கள் சஸ்பெண்ட்.. சென்னையில் பரபரப்பு..!

Mahendran
சனி, 1 ஜூன் 2024 (10:39 IST)
சென்னையில் சவீதா கல்லூரியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த 5 மாணவர்களும் ரூ 3 லட்சம் கல்லூரி கட்டணம் கட்டிய நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என கூறியதால் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மாணவர்களிடம் கல்லூரி கட்டணம் வசூல் செய்த 2 ஊழியர்கள்  தலைமறைவான நிலையில், அவர்களிடம் பணத்தை பெற்று வந்து கட்டுமாறு கல்லூரி நிர்வாகம் கூறியதாகவும், இதனால் கல்லூரி மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்திய நிலையில் கல்வி கட்டணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக கூறி 5க்கும் மேற்பட்ட எம்பிஏ மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் பல மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் சவீதா கல்லூரியில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் மாணவர்களிடம் கல்லூரி கட்டணத்தை பெற்று தலைமறைவான இரண்டு ஊழியர்களை காவல்துறையினர் தேடி வருவதாகவும் அவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
கல்லூரி மாணவர்களிடம் இருந்து கல்லூரி கட்டணத்தை பெற்று திடீரென தலைமறைவாகிய இரண்டு கல்லூரி ஊழியர்களால் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு கல்லூரி வளாகத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி.! எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments