பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து...திருமணத்திற்குச் சென்ற 45 பேர் படுகாயம்

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (16:45 IST)
தேவனூர் கல்வெட்டு திருப்பத்தின் இன்று தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது. இதில், 45 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

அரியலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்தவ மகேஸ்வரிக்கும், அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞருக்கும் இன்று காலையில் திருமண  நிகழ்ச்சி  நடைபெற்றது.

எனவே, மணமகளின்  வீட்டார், மற்றும் உற்றார் உறவினர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒரு தனியார் பேருந்தில், செந்துறைக்குச் சென்றிருந்த நிலையில், திருமணம் முடிந்து, இன்று காலை மீண்டும் தங்கள் ஊருக்குக் கிளம்பினர்.

இந்த நிலையில், தேவனூர்  கல்வெட்டு திருப்பத்தில் பேருந்து திரும்பியபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என மொத்தம் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து, உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஜெயங்கொண்டான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்