Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதியம் 1 மணிக்குள் 45% வாக்குப்பதிவு.. மாலைக்குள் 60%ஐ தாண்டும் என எதிர்பார்ப்பு..

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (13:57 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதியம் ஒரு மணிக்குள் சுமார் 45 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும் மாலைக்குள் 60% வாக்குப்பதிவை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,27,547 என்றும் ஆண் வாக்காளர்கள் 1,11,025 என்றும் பெண் வாக்காளர்கள் 1,16,497 என்றும் திருநங்கை வாக்காளர்கள் 25 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மொத்த வாக்காளர்களில் சுமார் 45 சதவீதம் வாக்காளர்கள் அதாவது 1,01,392 பேர் மதியம் ஒரு மணிக்குள் வாக்களித்து விட்டதாகவும் இன்னும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் 60% தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
குறிப்பாக முதல் முறையாக ஓட்டு போடும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஓட்டு போட்டு வருகிறார்கள் 
 
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்பாராத முடிவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகளிடம் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!

வந்துவிட்டது வயர்லெஸ் செல்போன் சார்ஜர்.. இனி சார்ஜ் போட்டு கொண்டே பேசலாம்..!

நீங்கள் உதைத்து விளையாட இந்தியா கால்பந்து அல்ல! அமெரிக்க முன்னாள் அதிகாரி ஆவேச பாய்ச்சல்!

மாலத்தீவின் உலக அளவிலான தூதராகிய பாலிவுட் நடிகை.. சில மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையே வேறு..!

பிரபலங்களை மிரட்டி பணம் பறித்த டிவி செய்தி தொகுப்பாளர்கள்.. பெண் உள்பட இருவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments