Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 4 தேர்வில் முறைகேடு… ஒரே மாவட்டத்தில் தேர்வெழுதியவர்கள் முன்னிலை – அதிர்ச்சியளிக்க வைக்கும் காரணம் !

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (08:59 IST)
அண்மையில் வெளிவந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் அடிப்படையில் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன் தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சந்தேகம் அதிகமாகியுள்ளது.

அந்த 40 பேரை சென்னைக்கு வர சொல்லி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் ’நீங்கள் ஏன் உங்கள் மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்காமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுத்தீர்கள் ?’  என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு அவர்கள் ’அனைவரும் எங்கள் பாட்டி மற்றும் தாத்தா அல்லது பாட்டி ஆகியோருக்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் சென்றோம் அப்படியே அங்கேயே தேர்வு எழுதி விட்டு வந்தோம்’ என கூறியுள்ளனர்.

இந்த பதில், சந்தேகத்தை மேலும் வலுவாக்க அடுத்த கட்ட விசாரணைகள் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12ஆம் வகுப்பு மாணவர்களின் நலனுக்காகவே 11ஆம் பொதுத்தேர்வு ரத்து: அமைச்சர் அன்பில் மகேஷ்

மெட்டாவுடன் தமிழக அரசு முக்கிய ஒப்பந்தம்: இனி வாட்ஸ்-ஆப் மூலமே அரசு சேவை..!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments