Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 அடி குழிக்குள் விழுந்த சிறுமியை புத்திசாலித்தனமாக மீட்ட இளைஞர்கள்

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (09:20 IST)
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்துள்ள சின்னபாபு சமுத்திரம் என்ற கிராமத்தில், சரோஜா என்பவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக பில்லர் அமைக்க சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டிய நிலையில் மறுநாள் அதில் வேலை நடைபெறவிருப்பதால் அந்த பள்ளம் மூடப்படாமல் இருந்துள்ளது.
 
இந்த நிலையில் 4 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென அந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்துவிட்டார். புதுச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் 4 வயது சிறுமி கோபிணி, குழிக்குள் தவறி விழுந்ததை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்க அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் முயற்சி செய்தனர். 
 
ஆனால் அந்த பள்ளம் மிகவும் குறுகியதாக இருந்ததால் உள்ளே இறங்கி மீட்க முடியாத நிலை இருந்தது.  இதனையடுத்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்த இளைஞர்கள் அந்த பள்ளத்தின் அருகே மற்றொரு குழியை வெட்டி, அதனுள் இறங்கி சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான வீடியோவை இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments