Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உள்பட 4 பேர் கைது

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (16:32 IST)
நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் சட்டவிரோதமான  டாஸ்மாக் மதுபாட்டில்களை காலை மற்றும் இரவு நேரத்தில் விற்பனை செய்து வருவதாக மேற்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்க மாணவரணி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரை திருச்செங்கோடு மதுவிலக்குப் பிரிவு போலீஸார் மற்றும் பரமத்திவேலூர் போலீஸார்  கைது செய்துள்ளனர்.

மேலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிகளில் காலை மற்றும் இரவு வேளைகளில்  சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸார் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வேலூர் நான்கு ரோடு மற்றும் சந்தைப் பகுதியில் செல்லாண்டியம்மன் கோயில், ஆகிய  பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்றதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி பாலகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 50 மதுபாட்டில்கள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு மொபட் ஆகிவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments