Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

Advertiesment
அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல்
, ஞாயிறு, 30 அக்டோபர் 2016 (10:52 IST)
சென்னையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் அதிக கட்டணம் வசூலித்த 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


 

 
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் பயணம் செய்வார்கள். பொதுவாக பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.
 
இந்த தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். 
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில், அதிக கட்டணம் வசூலித்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒ.பன்னீர் செல்வம் மணல் மாஃபியாவுடன் தொடர்பு?