Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரக்கணக்கான பேருந்துகள், லட்சக்கணக்கில் மக்கள்! – கலகலக்கும் பொங்கல் பயணம்!

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (09:47 IST)
பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ள நிலையில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தொடர் விடுமுறைகள் இருப்பதால் பலரும் சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். இதனால் ஜனவரி 12 முதலாக சென்னையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் வழியாக 3.94 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து தினசரி இயங்கும் 2100 பேருந்துகளை தவிர கூடுதலாக 2010 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பொங்கல் என்பதால் இன்று அனைத்து பேருந்து நிலையங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments