Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க்ரிப்டோ கரன்சியை மொத்தமா தடை செய்யணும்! – ரிசர்வ் வங்கி ஆளுனர் பரபரப்பு பேச்சு!

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (09:34 IST)
உலகம் முழுவதும் க்ரிப்டோகரன்சி பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் அதை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் க்ரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் கரன்சிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. பலரும் இதுபோன்ற க்ரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது ஒரு தொழிலாக மாறியுள்ளது. இந்தியாவிலும் க்ரிப்டோகரன்சி பயன்பாடு உள்ள நிலையில், சமீபத்தில் ரிசர்வ் வங்கியும் டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டது.

இந்நிலையில் க்ரிப்டோ கரன்சி குறித்து சமீபத்தில் பேசிய ரிசர்வ் வங்கு ஆளுனர் சக்திகாந்த தாஸ் “க்ரிப்டோகரன்சி வர்த்தகம் சூதாட்டத்தை போன்றது. ஒவ்வொரு சொத்துக்கும், பணத்திற்கும் ஒரு மதிப்பு இருக்க வேண்டும். ஆனால் க்ரிப்டோகரன்சிகளை பொருத்தவரை எந்த மதிப்பும் கிடையாது. க்ரிப்டோகரன்சி எந்த வகையிலும் நிதியாக இருக்காது. இந்தியாவில் க்ரிப்டோகரன்சி முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments