Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கடன் தொல்லை – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை !

Webdunia
ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (18:12 IST)
சென்னை ஆவடியில் கடன் தொல்லைக் காரணமாக  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை கொண்டுள்ளனர்.

சென்னை ஆவடியை அடுத்து அன்னனூர் எனும் கிராமம் உள்ளது. அங்கு கோவிந்தசாமி- சுப்பம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். நாகராஜ்(35), ரவி என்ற இரண்டு மகன்களும், கல்யாணி(28) என்ற மகளும் உள்ளனர். கல்யாணி தனது தாய் தந்தையருடனேயே அன்னனூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் ஆறுமுகம் அடிக்கடி வந்து தனது குழந்தைகள் மற்றும் மனைவியைப் பார்த்து சென்றுள்ளார்.

இந்நிலையில் கோவிந்தசாமியின் மருமகன் ஆறுமுகம் வழக்கம்போல தன் மனைவி மற்றும் பிள்ளைகளைப் பார்க்க நேற்று வந்துள்ளார். அப்போது வீட்டில் கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். மேலும் தன் மனைவி மற்றும் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

போலிஸார் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments