Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்: எத்தனை நாட்கள் டாஸ்மாக் மூடப்படும்?

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (16:31 IST)
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது 
 
இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை அடுத்து ஏப்ரல் 4 முதல் 6 தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மொத்தம் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments