Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (07:33 IST)
ஆயுதபூஜை, விஜயதசமி, மொகரம் பண்டிகை, காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை முடிந்து இன்று அனைவரும் சென்னை திரும்பி கொண்டிருப்பதால் சென்னை புறநகரின் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 



 
 
குறிப்பாக சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் தவிப்பில் உள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பேருந்துகள், கார்கள் வந்து கொண்டிருப்பதால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மேலும் சென்னை நகரில் உள்ள முக்கிய சாலைகளிலும் இன்று போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக சரியான பாதையை தேர்வு செய்து பயணம் செய்யும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments