Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் குழந்தைகளுக்கு சூடு போட்டு பிச்சை எடுக்க வைத்த தாய்: 4 குழந்தைகள் மீட்பு

சென்னையில் குழந்தைகளுக்கு சூடு போட்டு பிச்சை எடுக்க வைத்த தாய்: 4 குழந்தைகள் மீட்பு
, சனி, 18 ஜூன் 2016 (10:33 IST)
சென்னை காசிமேட்டில் குழந்தைகளுக்கு சூடு போட்டு பிச்சை எடுத்த தாய் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட குழந்தைகள் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


 
 
காசிமேடு, சூரிய நாராயணா தெருவில் கடந்த சில நாட்களாக ஒரு பெண், 2 பெண் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல் துறையினர் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண் மேற்கு வங்கத்தை சார்ந்தவர் என்பது தெரியவந்தது.
 
பின்னர் குழந்தைகள் மீட்பு காவலர்கள் அந்த பெண்ணிடம் இருந்த 2 குழந்தைகளையும் கைப்பற்றி காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த பெண் ஏற்கனவே சென்னை செண்ட்ரல் பகுதியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்தபோது அவரிடம் இருந்து ஏற்கனவே 2 குழந்தைகள் கைப்பற்றப்பட்டது.
 
அந்த குழந்தைகள் காசிமேட்டில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதை அறிந்து தான் இங்கு வந்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இவர் குழந்தைகளுக்கு சூடு வைத்து பிச்சை எடுத்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் அவரிடம் இருந்து தற்போது வரை 4 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைகள் தன்னுடைய குழந்தைகள் தான் என அந்த பெண் கூறிவந்தாலும், காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தந்தைக்கும் தனயனுக்கும் உள்ள பிரச்சனையை திசை திருப்புகிறார் ஸ்டாலின்: ஓபிஎஸ் அதிரடி