Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் பூங்காவில் 3D, 7D திரையரங்கம்: அரசாணை வெளியீடு

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (17:21 IST)
சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான வண்டலூர் பூங்காவில் 3D மற்றும் 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
சென்னை அருகே உள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது என்பதும் இங்கே தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்குள்ள விலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3D, 7D திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை பாதுகாப்பு குறித்த ஆர்வத்தை இளம் மனங்களில் உருவாக்க திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் புதிய மிருகக்காட்சி சாலை அருங்காட்சியகம்,  வனவிலங்குகளை புதிய வழியில் கண்டறிய  காட்சி மாதிரியுடன் விளக்க வளாகம் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments