Webdunia - Bharat's app for daily news and videos

Install App

39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னைக்கு புதிய ஆணையர்

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (07:27 IST)
39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஷ்வநாதன் உள்பட தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதில் 8 ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஐ.ஜி.,யாகவும், 9 ஐ.பி.எஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.,யாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ஏ.கே., விஸ்வநாதன் அவர்கள் காவல் துறை செயலாக்கம் ஏ.டி.ஜி.பி.,யாக மாற்றம். இதனால் சென்னையின் புதிய காவல்துறை ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் காவல்துறை செயலாக்க டிஜிபியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அதேபோல மதுரை காவல்துறை ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் என்பவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையராக(தெற்கு) இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
மேலும் மத்திய மண்டல ஐ.ஜி., யாக இருந்த அமல்ராஜ் சென்னை காவல்துறை தலைமையகம் கூடுதல் ஆணையராகவும்; சென்னை காவல்துறை தலைமையகம் கூடுதல் ஆணையராக இருந்த ஜெயராம் மத்திய மண்டல ஐ.ஜி.,யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்
 
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி ரவி சிறப்பு அதிரடிப்படை(ஈரோடு) ஏ.டி.ஜி.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
திருச்சி சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த பாலகிருஷ்ணன் சென்னை காவல் துறையின் வடக்கு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
மேலும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன், ஐ.ஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 
திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய்குமார் தொழில்நுட்ப சேவை துறைக்கும், கோவை சரக டி.ஐ.ஜியாக நரேந்திரன் நாயர் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments