Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு.. ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்களின் நிலை என்ன?

Siva
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (07:48 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 30 தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் கேரளாவில் நடந்த நிலச்சரிவில் மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் 30 தமிழர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வானிலை நன்றாக இருந்தால் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு இன்றே 30 தமிழர்களும் தமிழ்நாடு அழைத்து வரப்படுவார்கள் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார். சிதம்பரத்திலிருந்து ஆன்மீக சுற்றுலாவுக்கு 30 தமிழர்கள் சென்றதாகவும் ஆதி கைலாஷ் என்ற பகுதியிலிருந்து வரும்போதுதான் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் இந்த நிலச்சரிவில் இதுவரை உயிர் சேதம் குறித்த தகவல் எதுவும் வரவில்லை என்றும் தெரிகிறது.

இருப்பினும் வேனில் சென்ற 30 தமிழர்கள் எதிரில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதை அவர்கள் பார்த்து அச்சமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பயணம் செய்த வேனில் எரிபொருள் இல்லாததால் நடுவழியில் சிக்கி தவிக்கும் நிலையில் அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments