நாளை பிறக்கிறது புரட்டாசி மாதம்.. மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்..!

Siva
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (07:41 IST)
நாளை புரட்டாசி மாதம் பிறக்க இருக்கும் நிலையில் இன்று மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் புனிதமாக கருதப்படுகிறது என்பதும் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
 
இந்த நிலையில் நாளை புரட்டாசி மாதம் பிறக்க உள்ளதை அடுத்து இன்று அசைவம் சாப்பிடுவதற்காக பொதுமக்கள் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்துள்ளதாக தெரிகிறது. மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் போட்டி போட்டு பல்வேறு வகையான மீன்களை வாங்கிச் சென்றனர்.

வழக்கத்தை விட இன்று சங்கரா கொடுவாய், இறால் ஆகியவை மீன்கள் விலை குறைவாக இருந்ததை அடுத்து அந்த மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல் சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் குவிந்து வருவதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆவணி கடைசி நாள் என்பதால் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது.

நாளை முதல் ஒரு மாதத்திற்கு பெரும்பாலான பொதுமக்கள் அசைவத்தை தவிர்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments