Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலெக்டரிடம் மனு கொடுத்த 3 வயது சிறுவன்: சிவகங்கையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (08:40 IST)
பொதுவாக பெரியவர்கள் தான் கலெக்டரிடம் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை விடுத்து கலெக்டரிடம் மனு கொடுப்பதுண்டு. எப்போதாவது மாணவ, மாணவிகளும் கலெக்டரிடம் மனு கொடுப்பதுண்டு. ஆனால் சிவகங்கை அருகே 3 வயது சிறுவன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சிவகங்கை அருகே உள்ள மாடக்கோட்டை என்ற பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. ஆனால் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த அங்கன்வாடி திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் அதன் பலனை அனுபவிக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த 3 வயது சிறுவன் குமரகுரு என்பவன் அங்கன்வாடியை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டரிடம் மனு அளித்தார். தன் பெற்றோருடன் வந்த சிறுவன் தன்னை போன்ற சிறுவர், சிறுமியர் பயன்பெற விரைவில் அங்கன்வாடி மையத்தை திறக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்ததை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments