Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (11:51 IST)
கோவையில் தங்கநகை தயாரிப்பு தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது வி‌ஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ரவிசங்கர்(50) என்பவர் ‘ஸ்ரீபத்மராஜா ஜூவல்லரி’ என்ற பெயரில் தங்கநகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். தங்க நகைகளை சுத்தப்படுத்தும் தொட்டியிலிருக்கும் னைட்டிச் ஆசிட்(NITRIC ACID)  கழிவுகளை அகற்ற  கவுரிசங்கர்(21), ஏழுமலை(23) ஆகியோர் சின்டெக்ஸ் தொட்டியில் இறங்கினர். எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி அவர்கள் இருவரும் தொட்டியினுள் மயங்கி விழுந்தனர். அவரை காப்பாற்ற சென்ற  சூர்யா(23) என்பவரும் மயங்கி விழுந்தார். கவுரிசங்கர் மற்றும் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments