Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டப்பு டப்புனு விழுந்த 3 விக்கெட்: தினகரனுக்கு வந்த சோதனை!!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (17:07 IST)
டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இருந்து முக்கிய பொறுப்பில் உள்ள மூன்று பேர் கட்சி மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் அமமுக போட்டியிட்டதே தவிர வெற்றி பெறவில்லை. இதனால் அப்போது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக மற்றும் திமுகவை நோக்கி படையெடுத்தனர். 
 
கட்சியில் இருந்து பலர் விலகினாலும் இருப்பவர்களை வைத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டார் டிடிவி தினகரன். உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக வெற்றியை பதிவு செய்தது அமமுக. இது கட்சிக்குள் இருப்பவர்களுக்கு சற்று தெம்பை கொடுத்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கிடைக்காத சிலர் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில், அமமுக சேர்ந்த மாநில அம்மா பேரவை தலைவர் புலவர் பி.எச்.சாகுல்ஹமீது, மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிங்கை பிரதீப்குமார், மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் ஆர்.கோபிநாத் ஆகியோர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இது கட்சிக்குள் இருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments