Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

Mahendran
வியாழன், 15 மே 2025 (16:19 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் பலியாகிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி என்ற பகுதியில், அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அண்ணாமலையின் நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் இந்த பிறந்த நாள் விழாவுக்கு வந்திருந்தனர். அவர்களில் பலர் விருந்தில் சாப்பிட்டனர்.
 
இந்த நிலையில், பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது வரை 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும், சிகிச்சை பெற்று வந்த கருப்பையா என்பவர் உயிரிழந்ததாகவும், இது குறித்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., வட்டாட்சியர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உணவில் ஏதாவது கலந்ததா என்பது தொடர்பாகவும் ஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments