Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 266, சென்னையில் 203: கொரோனா பாதித்த எண்ணிக்கையால் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (19:12 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆக அதிகரித்துள்ளது என்பதை சற்றுமுன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்பதும் சென்னையில் மொத்தம் 1458 பேர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 38 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் இதனையடுத்து மொத்தம் 1,379 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் சென்னையை அடுத்து கடலூரில் 9 பேர்களும், கள்ளக்குறிச்சியில் 6 பேர்களும் கோவையில் நால்வரும், அரியலூர், மதுரை, சிவகங்கை மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதியில் தலா இருவரும் செங்கல்பட்டு, கன்னியாகுமரி மற்றும் திருவண்ணாமலையில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இன்று பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments