தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் 26 பேர்களுக்கு கொரோனா

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (13:18 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் தற்போது பத்திரிகையாளர்களையும் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்க தொடங்கிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில் பத்திரிகையாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருப்பதால் ஏற்கனவே இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த சேனலில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தற்போது செய்யப்பட்டு வருகிறது.
 
மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள 26 செய்தியாளர்களும் தற்போது அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த 26 பேர்களையும் சேர்த்தால் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எகிறும் என அஞ்சப்படுகிறது 
 
கொரோனா வைரஸ் தாக்கம் முடியும் வரை பத்திரிகையாளர்கள் மிகக் கவனத்துடன் செய்தி சேகரிக்க வேண்டும் என்றும் சமூக நிலைகளை கண்டிப்பாக பத்திரிகையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments