Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

63 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: 25 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

63 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: 25 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
, செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (17:30 IST)
63 வயது மூதாட்டிக்கு 25 வயது வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
புதுச்சேரியை அடுத்த பாகூர் என்ற பகுதியில் கடந்த ஆண்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த 63 வயது மூதாட்டியை 25 வயது சிலம்பரசன் என்பவர்  பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவருடைய செல்போனை திருடிவிட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து கடலூரை சேர்ந்த சிலம்பரசன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ள நிலையில் சிலம்பரசனுக்கு ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2024 நாடாளுமன்றத் தேர்தல்.. முதல் வேட்பாளரை அறிவித்த சீமான்