Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலை உச்சியில் நின்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு

மலை உச்சியில் நின்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு

மலை உச்சியில்  நின்று செல்பி எடுக்க முயன்ற இளைஞர் உயிரிழப்பு
, புதன், 27 ஏப்ரல் 2016 (15:16 IST)
கொடைக்கானலில் 25 வயது இளைஞர், மலை உச்சியில் செல்பி எடுக்க முயன்ற போது பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தார்.


 

 
மதுரை பிபி குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது இரண்டு நண்பர்களுடன் விடுமுறைக்கு கொடைக்கானல் சென்றார்.
 
அங்கு அவர் சுற்றுலாதளங்களை சுற்றிப் பார்த்து விட்டு மது அருந்தியதாகவும் பின்னர் தடைச்செய்யப்பட்ட வனப் பகுதியில் உள்ள மலை உச்சிக்குச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
 
அங்கு செல்பி எடுக்க கார்த்தி முயன்றுள்ளார் அப்போது சுமார் 1000 அடிக் கொண்ட பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், பள்ளத்தாக்கில் விழுந்த கார்த்திக்கின் உடலை மீட்க, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுப்பட்டு வருவதாக கொடைக்கானல் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
 
இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் ஒரு விஜயகாந்த்: நாக்கை மடக்கி தொண்டரை அடித்த ஆ.ராசா (வீடியோ இணைப்பு)