Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்தெந்த மாவட்டங்களுக்கு பேருந்து அனுமதி தெரியுமா?

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (20:44 IST)
ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 23 மாவட்டங்களில் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த புதிய ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார் அவை என்ன என்பதை தற்போது பார்ப்போம். அதன் ஒரு கட்டமாக தொற்று குறைவாக உள்ள 23 மாவட்டங்களுக்கு பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் வகை 2-ல் உள்ள  23 மாவட்டங்களான அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பேருந்து பயணத்தில் 50 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments