கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் ரூ.2000கோடி வழங்கப்பட்டுள்ளது- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (18:53 IST)
திமுக அரசின் கட்டணமில்லா  பேருந்து திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இதுவரை ரூ.2000கோடி வழங்கப்பட்டுள்ளதாக இன்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு தமிழகத்தில் நடந்த சட்டபேரவைத் தேர்தலில் திமுக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அமைந்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  மா நிலம் முழுவதும் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  திமுக அரசின் கட்டணமில்லா  பேருந்து திட்டத்தின் மூலம் பெண்களுக்கு இதுவரை ரூ.2000கோடி வழங்கப்பட்டுள்ளதாக இன்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் ரூ.2000  கோடி பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது என்றும் இது அரசு வருமான இழப்பாக கருதவில்லை  மகளிர் மேம்பாட்டு வளர்ச்சி திட்டமாகவே கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பெண்களைப் பார்த்து ஓசியில் தானே பஸ்ஸில் செல்கிறீர்கள் எனக் கேட்டு சர்ச்சையாகி, இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments