Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாம்பை பிடித்து வேடிக்கை காட்டிய 12ம் வகுப்பு மாணவன் பலி

பாம்பை பிடித்து வேடிக்கை காட்டிய 12ம் வகுப்பு மாணவன் பலி
, புதன், 1 மார்ச் 2017 (11:47 IST)
பால்கர் மாவட்டம் வசாய் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அவேஜ்(17). 12ம் வகுப்பு படித்துவந்த அந்த மாணவனுக்கு பாம்புகள் பிடிப்பதில் ஆர்வம் அதிகம்.சம்பவத்தன்று அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டிற்குள் நல்லபாம்பு ஒன்று புகுந்தது. இதனை அறிந்த முகமது அங்கு சென்று பாம்பை பிடித்தார்.

 

இந்த சம்பவம் குறித்து அறிந்த பொதுமக்கள் அங்கு கூடினர். கூட்டத்தைக் கண்ட முகமது தான் பிடித்த  நல்ல பாம்பை வைத்து வேடிக்கை காட்டத்தொடங்கினார். அப்போது திடீரென பாம்பு மாணவனின் கையில் கடித்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மாணவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி முகமது உயிரிழந்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவை எதிர்த்த தேனி காவல் அதிகாரி சஸ்பெண்ட்