Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகாசி அருகேயுள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து....2 பேர் பலி

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (14:12 IST)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

விருது நகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டியில் மார்டன் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில், இன்று, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்த நிலையில்,  , திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு நபர் காயமடைந்ததாக கூறப்பட்டது.

தற்போதைய தகவலின்படி, 2 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்  பட்டாசு ஆலைக்குள் யாரும் நுழையா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாட்டு செய்துள்ளனர்.

இந்த வெடிவிபத்து, வெப்பம் காரணமாக அலது உராய்வின் காரணமாக் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறையின கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments