Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா 3வது அலை: 2,111 காவலர்களுக்கு தொற்று!

கொரோனா 3வது அலை: 2,111 காவலர்களுக்கு தொற்று!
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:22 IST)
தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலையில் இதுவரை 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை நேற்று தமிழகத்தில் 28,561 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்தது. 
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலையில் இதுவரை 2,111 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 18 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் 6 காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 
 
தமிழ்நாடு காவல்துறையில் நேற்று மட்டும் 328 காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஷ்பா படத்தை பார்த்து இளைஞர் கொலை - 3 சிறுவர்கள் கைது!