Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை..! 3 மீனவர்களுக்கு 6 மாதம் சிறை..!!

fisherman boat

Senthil Velan

, வெள்ளி, 22 மார்ச் 2024 (14:06 IST)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், மூன்று படகு ஓட்டுனர்களுக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
 
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த 10 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தது. மூன்று விசை படகுகளை பறிமுதல் செய்தது.
 
இதனிடையே  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த பதினொன்றாம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.
 
இந்நிலையில் கைதான 22 பேரில் 19 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று படகு ஓட்டுனர்களுக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


மூன்று மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குனி மாத பிரதோஷம் பெளர்ணமி.. சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி!