Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முந்தியடிக்கும் மக்கள்… 19.24 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைப்பு!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:19 IST)
இதுவரையில் தமிழகத்தில் மொத்தம் 19.24 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன என தகவல்.


மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31 ஆம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் இருந்தாலும் பொதுமக்கள் தற்போது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க இணையதளத்திலும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதோடு மின் கட்டண வசூல் மையங்களில் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 5 லட்சம் மின் இணைப்புகள் உடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்…

இதுவரையில் தமிழகத்தில் மொத்தம் 19.24 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதில் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி நேற்று மட்டும் 2.28 லட்சம் இணைப்புகளும், ஆனலைன் மூலம் 2.02 லட்சம் இணைப்புகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

Edited by: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருவருடைய பெர்சனல் டேட்டா வேண்டுமா? வெறும் 99 ரூபாய்க்கு கிடைக்கும்.. அதிர்ச்சி தகவல்..!

கேமிங் ஸ்டுடியோக்களை இழுத்து மூடும் Microsoft! அதிர்ச்சியில் XBox ஊழியர்கள்!

சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: 2 மாணவர்கள் உள்பட மூவர் கைது..!

மின்வெட்டு என புகார் கொடுக்க வந்த குடியிருப்பாளர்கள்: கட்டையை எடுத்து தாக்கிய பாதுகாவலர்கள் .. அதிர்ச்சி சம்பவம்..

ஈரான் தலைவர் காமேனியை போட்டுத்தள்ள ப்ளான்.. ஆனால்..? - இஸ்ரேல் அமைச்சர் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments