Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பக்கத்து வீட்டு பெண்ணின் குளியலறையில் கேமரா பொருத்தி இன்பம் கண்ட வயசு பையன்!

பக்கத்து வீட்டு பெண்ணின் குளியலறையில் கேமரா பொருத்தி இன்பம் கண்ட வயசு பையன்!

பக்கத்து வீட்டு பெண்ணின் குளியலறையில் கேமரா பொருத்தி இன்பம் கண்ட வயசு பையன்!
, செவ்வாய், 11 ஜூலை 2017 (13:39 IST)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயது பையன் ஒருவன் பக்கத்து வீட்டின் குளியலறையில் கேமரா ஒன்றை பெருத்தி, அந்த பெண் குளிப்பதை பார்த்து இன்பம் கண்டு வந்துள்ளான்.


 
 
காஞ்சிபுரம் மாவட்டம் நந்திவரம் பெரிய குளக்கரை வள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்த 18 வயதான திவாகர் என்ற வாலிபன் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள ஒரு திருமணமான பெண் மீது மோகம் கொண்டு இருந்துள்ளான்.
 
இதனால் அந்த பெண்ணை அசிங்கமாக பார்க்க அந்த பெண்ணின் குளியலறையில் ரகசிய கேமரா ஒன்றை பெருத்தியுள்ளான். அதன் பின்னர் அந்த பெண் குளிக்கும் காட்சிகளை பதிவு செய்த அந்த வாலிபன் அதன் மூலம் இன்பம் கண்டு வந்துள்ளான். ஆனால் தான் குளிக்கும் குளியலறையில் கேமரா இருப்பது அந்த அப்பாவி பெண்ணுக்கு தெரியாது.
 
ஒரு நாள் அதே குளியலறையில் அந்த பெண்ணின் கணவர் குளிப்பதற்கு சென்ற போது அங்கு கேமரா பொருத்து இருப்பதை கண்டுபிடித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காவல்துறையினர் பக்கத்து வீட்டில் உள்ள திவாகரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணை ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை களமிறக்கும் எதிர்க்கட்சிகள்