Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’அதிர்ச்சி’ - சென்னையில் 1700 மக்கள் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள்!

Advertiesment
தமிழகம்
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:13 IST)
தமிழகத்தில் வருகிற 17 மற்றும் 19-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


 
 
சென்னையில் 300 சாவடிகள் பதட்டமானவை என கண்டறிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கூடுதல் பாதுகாப்பு போடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
தொழில் அதிபர்கள் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்துக்கொள்ள காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
 
மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் பேர் ‘லைசென்ஸ் துப்பாக்கி’களை வைத்துள்ளனர். சென்னையில் 1700 பேர் துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
 
மேலும், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வன்முறையை தடுக்க, தமிழகம் முழுவதும் இருக்கும் ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். மேலும், உள்ளாட்சி தேர்தலின் போது, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவியுடன் குத்தாட்டம் போட்ட முன்னாள் பாகிஸ்தார் அதிபர் முஷாரப் : வைரல் வீடியோ