Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது: இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (10:27 IST)
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இராமேஸ்வரம் நெடுந்தேவு அருகே தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 16 மீனவர்களை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் இரண்டு படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்து கொண்டு சென்று உள்ளனர். 
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 16 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மத்தியில் கோரிக்கை இழந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments