Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை: எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை: எங்கெங்கு தெரியுமா?
, வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (14:41 IST)
தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் மழையை எதிர்ப்பார்க்கலாம். 
 
அதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு