Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 மதிப்பு ஹெராயின் பறிமுதல்: 2 தான்சானியா நாட்டினர் கைது!

சென்னை விமான நிலையத்தில் ரூ.100 மதிப்பு ஹெராயின் பறிமுதல்: 2 தான்சானியா நாட்டினர் கைது!
, வெள்ளி, 7 மே 2021 (19:56 IST)
சென்னை விமான நிலையத்தில் இன்று 100 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானம் ஒன்றில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
 
இதனையடுத்து விமான பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய ஒரு விமானத்தில் இருந்து இரண்டு தான்சானியா நாட்டினர் சந்தேகத்திற்கிடமாக இருந்தனர்
 
உடனடியாக அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து ரூபாய் 100 கோடி மதிப்புள்ள 15.6 கிலோ எடையுள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் அறையில் மருமகன் சபரீசன்: நிழல் முதல்வர் என நெட்டிசன்கள் குற்றச்சாட்டு!