Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைனர் பெண்ணை 7 மாதங்களாக பாலியல் வல்லுறவு – கர்ப்பமான சிறுமி மருத்துவமனையில் !

மைனர் பெண்ணை 7 மாதங்களாக பாலியல் வல்லுறவு – கர்ப்பமான சிறுமி மருத்துவமனையில் !
, செவ்வாய், 7 ஜனவரி 2020 (08:23 IST)
திருப்பூரை அடுத்த கிராமம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவரை கூலித் தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர், உடுமலைப்பேட்டைக்கு அருகே உள்ளது ஜல்லிப்பட்டி எனும் கிராமம். இரு தினங்களுக்கு முன்னர் இந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அவரது பெற்றோர். அங்கு நடந்த பரிசோதனைகளில் 14 வயதான அந்த சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளனர்.

இது சம்மந்தமாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது சிறுமி, தனது கர்ப்பத்துக்கு காரணம் தங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் கதிரேசன் என்ற இளைஞர்தான் காரணம் என சொல்லியுள்ளார். மேலும் விசாரணையில் சிறுமியிடம் திருமண ஆசை காட்டி கதிரேசன் 7 மாதங்களாக இதுபோல பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்சக்கணக்கான மக்கள் ஊர்வலம்: ஈரான் தளபதி உடல் அடக்கம்!