Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை கற்பழித்துவிட்டு 3 லட்சம் தருவதாக பேரம் பேசிய அயோக்கியன்

Webdunia
சனி, 19 மே 2018 (12:17 IST)
கிருஷ்ணகிரி அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன், அதற்கு நஷ்ட ஈடாக 3 லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த நத்தகயம் பகுதியை சேர்ந்தவன் ஆசைதம்பி(32). இவனுக்கு திருமணமாகி இவனது மனைவி 6 மாத கர்ப்பமாக உள்ளார்.
 
இந்நிலையில் ஆசைத்தம்பி அதேபகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கற்பழித்துள்ளான். இதனால் சிறுமி கர்ப்பமானார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் அதிர்ந்துபோய் பஞ்சாயத்தைக் கூட்டினர்.
 
பேச்சுவார்த்தைக்கு வந்த ஆசைத்தம்பி, சிறுமியை கற்பழித்ததற்கு 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருவதாகவும், இதனை பெற்றுக்கொண்டு சிறுமியின் கருவை கலைக்குமாறு கூறியுள்ளான். இதனால் அங்கிருந்தவர்கள் கடும் கோபமடைந்து, சின்னசாமியை சரமாரியாக தாக்கினர். 
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சின்னசாமி மீது வழக்கு பதிந்துள்ள போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments