Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 14; கோமாவில் இருந்தவர் பலி

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (18:01 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்றது. இதை அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், கடந்த மே மாதம் 22 ஆம் தேதி பேரணி நடைபெற்றது. 
 
அமைதியாக நடைபெற்று வந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டதால் போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் மரணமடைந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 
 
இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழமுடிமண் கிராமத்தை சேர்ந்த ஷிப்பிங் கம்பெனி டிரைவர் ஜஸ்டின் மரணமடைந்தார்.
 
கலவரத்தின் போது போலீஸ் நடத்திய தடியடியில், படுகாயமடைந்த இவர் கடந்த ஐந்து மாதங்களாக கோமாவில் இருந்தார். அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த இவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 
 
இதனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments