Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் கூடுதலாக 13 மதுக்கடைகள் திறக்க அனுமதி: எங்கே தெரியுமா?

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (13:51 IST)
தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக 13 மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 49 டாஸ்மாக் கடைகள் இருந்தாலும் அவற்றில் 16 கடைகள் மட்டுமே திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. மற்ற பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகம் இருந்த காரணத்தால் அனுமதி அளிக்கப்படவில்லை
 
இந்த நிலையில் நாளை முதல் அவற்றில் கூடுதலாக 13 கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து காஞ்சிபுரத்தில் மொத்தம் நாளை முதல் 29 டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் புதிதாக திறக்கப்பட்டுள்ள 13 கடைகளுக்கு வரும் மது பிரியர்கள் அனைவரும் கட்டாயம் கையில் குடையுடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்றும், ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments