Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர்களுக்கு கொரோனா தொற்று: சென்னையில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (07:31 IST)
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது,. 
 
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேர்களும், சென்னையில் 174 பேர்களும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள சென்னையில் ஆங்காங்கே கொரோனா பாதிப்பு மிக் அதிகமாகி வருகிறது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியால் கொரோனா தொற்று சென்னையில் மிக வேகமாக பரவி வருகிறது.
 
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 13 பேர்களும் சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இதேபோல் சென்னை ஆதம்பாக்கம் பகுதியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதை அடுத்து மூவரும் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் 60வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments